8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுசெயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி. ஆர். பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வானதாக கட்சி தலைவர் முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து சட்ட திருத்தத்தின் படி பொதுச் செயலாளர்களாக ஆ. ராசா, பொன்முடி இருவரும் தேர்வாகினர்.

இதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய முக ஸ்டாலின், இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர். பி. உதயகுமாரிடம் ஸ்டாலின் பேச்சு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “8 மாதங்கள் அல்ல; எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது. எட்டு மாதங்களில் தேர்தல் வரும்போது அதிமுகவுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள்” என்று உறுதிப்பட கூறியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே