கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழகம் உள்பட 10 மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவாக பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது,
- நாட்டில் 80 சதவிகித கரோனா தொற்று பாதிப்பு 10 மாநிலங்களில் மட்டுமே உள்ளது.
- இறப்பு குறைந்து, குணமடைவோர் அதிகரிப்பது நாம் கரோனா தடுப்பில் சரியான பாதையில் செல்வதையே காட்டுகிறது.
- கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது.
- கொரோனா தடுப்பு பணிகள் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
- சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.
- COVID19 பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது-புதிய சூழலும் உருவாகிறது.
- கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது.
- கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- அதிகம் பாதித்த மாநிலங்கள் பேசும் போது தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும்.
- இதனால் நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது.
- பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பேசிய வீடியோ பதிவு: