சர்வதேச இளைஞர்கள் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், நாளையின் முன்னறிவிப்பாளர்கள், மூதறிஞர்கள், முன்னோடிகள், இளைஞர்கள்தான் என்று கூறியுள்ளார்.
அவர்களின் அறிவு பசியோடும், கேள்விகளோடும் திளைத்திருக்க இளைஞர் தின வாழ்த்துக்கள் எனக்கூறியுள்ள கமல்ஹாசன் மாற்றத்திற்கான விதை இளைஞர்கள்தான் எனவும், நாளை நமதே என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நூலகத் தினத்தையொட்டியும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், நூலகங்களின் வடிவம் மாறலாம், தேவை என்றும் மாறாது என கூறியுள்ளார். நம் இனத்தின் அறிவும், புரிதலும் மட்டுமே நம் இனத்தை முன்னோக்கி நகர்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.
தொழில் நுட்பங்கள் எத்தனை மாறினாலும், நூலகத்தின் தேவை மாறாது, எழுத்து உருவாகும் முன் ஆசிரியர்களே நூலகங்களாய் வாழ்ந்தார்கள் என்றும் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.