எஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டால் அதிமுக அவரது ஆசையை நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடி குறித்தும், தமிழக முதல்வர் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘எஸ்.வி.சேகர் வழக்கு தொடர்ந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்’ என பேசியிருந்த நிலையில், முதல்வர் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறாக பேசியதாக சென்னை குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒருமுறை இவ்வாறாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு எஸ்.வி.சேகர் தலைமறைவான நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் ‘எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்ததும்; முதல்வர் குறித்து அவதூறாக பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எஸ்.வி.சேகர் நீண்ட காலமாக சிறை செல்ல ஆசைப்படுகிறார். அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும்’ என கூறியுள்ளார்.