திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய பேரணி நிறைவு!

மத்திய அரசு இந்த CAA மற்றும் NRC சட்டத்தை திரும்ப பெறாவிட்டால், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒன்று கூட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே புறப்பட்ட திமுக பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை சென்றடைந்தது.

வழிநெடுகிலும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

”பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே”, ” எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம் ஈழத்தமிழர்களும், இஸ்லாமியர்களும் எங்கள் ரத்தம்”,

”வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்.. குழி பறிக்கும் சட்டம் வேண்டாம்” என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசுக்கு அதிமுக அரசு துணை போகக் கூடாது என்றும்; ஈழத்தமிழர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துவிட்டதாகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் அதிமுக எம்.பி.க்களை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் ஒலித்தன.

பேரணி நடைபெற்ற சுமார் ஒன்றை மணி நேரமும் தொடர்ந்து முழக்கங்கள் ஒலித்தபடியே இருந்தன. இடைவிடாமல் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறே அமைதியான முறையில் பேரணி நிறைவடைந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே