Breaking: 43 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை.. சவரனுக்கு ரூ.368 உயர்வு…!!

தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. விரைவில் ரூ.50 ஆயிரத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.46 உயர்ந்து ரூ.5,420க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டு வருகிறது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்சம் என்ற சாதனையை படைத்துள்ளது.

சென்னையில் கடந்த 38 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 6,480 வரை உயர்ந்துள்ளது. தற்போது தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்துள்ளது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேகத்தில் வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி கிராமிற்கு ரூ.2.20 காசுகள் அதிகரித்து ரூ.83.80க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.83,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே