வீட்டிலேயே செக் அச்சடித்து , போர்ஷே கார் வாங்கிய நபர் கைது

அமெரிக்காவில் போலி காசோலையை கொடுத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷே ஆடம்பர கார் வாங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த வால்டன் கவுண்டி சேர்ந்தவன் கேஸே வில்லியம் கெல்லி.

42 வயதாகும் கெல்லி கடந்த மாதம் 27ம் தேதி போர்ஷே கார் ஷோரூமுக்குச் சென்று, 139,203 டாலர் மதிப்புள்ள (இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்) காசோலையைக் கொடுத்து ’போர்ஷே 911 டர்போ’ காரை வாங்கியுள்ளார்.

கார் டீலர் காசோலையை வங்கிக்கு அனுப்பி வைத்த பிறகுதான், அந்தக் காசோலை போலியானது என்று தெரியவந்தது.

ஒரு கோடி ரூபாய் மதிக்கத்தக்க காரை வில்லியம் கெல்லி திருடிவிட்டதாக போலிசில் புகார் கொடுக்கப்பட்டது.

போலீசார் திருடனைத் தேடத் தொடங்கினர்.

ஆனால் போலியான முகவரியைக் கொடுத்ததால் திருடன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் திருடப்பட்ட போர்ஷே காருடன் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வில்லியம் பதிவேற்றியுள்ளார்.

இந்தப் புகைப்படம் மூலம் விலியம்மின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த போலிசார் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையே சுமார் 46 லட்சம் ரூபாய் அளவுக்குப் போலி காசோலை கொடுத்து நகைக்கடை ஒன்றில் 3 ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை வாங்கவும் அவன் முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வில்லியம் கெல்லியைக் கைது செய்து விசாரணை செய்தபோதுதான் போலியான காசோலைகளை வீட்டிலேயே அச்சடித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே