மொபைல்போன் சார்ஜ் போடும்போது விபரீதம்..; 17 வயது சிறுவர் பலி..!!

மொபைல் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவர் திடீரென பலியாகி உள்ளது சென்னையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

சென்னையை பகுதியில் கொடுங்கையூரில் சஞ்சய் என்ற 17 வயது சிறுவன் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி பல வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு வேலையை முடித்து கொண்டு செல்போனுக்கு சார்ஜ் போடும் போது திடீரென மின்சாரம் தாக்கி இருக்கின்றது.

இதன் காரணமாக அந்த சிறுவன் மயக்கம் அடைந்துள்ளார்.

அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை அடுத்து சஞ்சயின் சடலம் அவருடைய பெரியம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மிகவும் மலிவாக கிடைப்பதால் தரம் குறைந்த மொபைல் சார்ஜரை வாங்கி பயன்படுத்தினால் இது போல ஷாக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆகவே, மொபைல் போனுக்கு தரமான சார்ஜர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே