இந்த ஒன்றை பற்றி தான் பயம்: வலிமை ஹீரோயின் ஹுமா குரேஷி.

வலிமை படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்துவரும் ஹுமா குரேஷி தனது ஒரு விஷயத்தை பற்றி மட்டும் பயம் இருப்பதாக கூறி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஹுமா குரேஷி. அந்த படத்தில் அவர் ரஜினியின் இளம் வயது காதலியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் பிறகு தற்போது அஜித்தின் வலிமை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஹுமா குரோஷி.
தற்போது கொரோனா லாக் டவுன் நேரத்தில் ஷுட்டிங் எதுவும் இல்லை என்பதால் அவர் தன்னுடைய வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார். தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் அதிகம் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் ஹீமா குரேஷி தன்னுடைய ஒர்க் அவுட் செல்பி ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் தனக்கு இருக்கும் ஒரு பயம் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார் அவர்.

“என்னுடைய மிகப்பெரிய பயம்ஹுமா குரேஷிக்கு இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இப்படி பதிவுகளை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த பதிவை ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

ஹுமா குரேஷி அடுத்து நடித்து வரும் வலிமை படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹுமா குரேஷிக்கு இந்த படத்தில் ஆக்ஷன் கலந்த கதாப்பாத்திரம் என கூறப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக அவர் பைக் ஓட்டவும் கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் போலவே இவருக்கும் பைக் காட்சிகள் இருக்கும் என தெரிகிறது.

வலிமை படத்தின் ஷுட்டிங் கொரோனா முழு ஊரடங்கு போடப்படுவதற்கு முன்பு வரை மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அதன் பிறகு அரசு ஷுட்டிங் நடத்த அனுமதி அளிக்கவில்லை என்பதால் படக்குழுவினர் அதற்காக காத்திருக்கின்றனர். அரசு அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளை இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்த இயக்குனர் வினோத் திட்டமிட்டு இருந்தார். ஆனால் உலகம் முழுவதும் தற்போது கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு சென்று ஷுட்டிங் நடத்துவது சாத்தியமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதனால் அந்தக் காட்சிகளில் மாற்றங்கள் செய்ய இயக்குனர் முயற்சித்து வருவதாக இதற்கு முன்பே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஹூமா குரேஷி அடுத்து அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் பெல் பாட்டம் என்ற படத்தில் நடிக்க உள்ளார் என சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. 80களில் நடப்பது போன்ற கதை களம் கொண்ட இந்த படத்தில் இவருக்கு மிக முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. வாணி கபூர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். 80களில் பெல் பாட்டம் பேண்ட்கள் மிக அதிகளவில் பிரபலம் என்பதால் இந்த தலைப்பை இந்த படத்திற்கு வைத்திருக்கின்றனர். இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே