கொரோனாவால் உயிரிழந்த கிறிஸ்தவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இஸ்லாமியர்கள்!

மதுரையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தையை அவரது ஆசைப்படி கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கத்தின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் எல்லிஸ் நகர் எனும் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவரின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

உடல்நிலை மோசமடைந்து வருவதை அறிந்த அவர், தான் இறந்து விட்டால் தன்னை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யுமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, அவரது ஆசைப்படி அவரது மகளாகிய பெண் மருத்துவருடன் இணைந்து இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக இளைஞர்கள் சிலர் சேர்ந்து அவரது தந்தையை அவரது ஆசைப்படி கிறிஸ்தவ முறையில் அடக்கம் செய்துள்ளனர். 

கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அருகிலேயே செல்ல அஞ்சும் இந்த காலத்தில் இறந்தவரின் உடலை பெண் மருத்துவரின் உதவியுடன் இறுதி ஆசை நிறைவேற அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்களின் செயல் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே