தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்களின் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: செயலாளர் ராதாகிருஷ்ணன்..!!

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்களின் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மழை காலங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று சம்பந்தமான மருந்துகள் அரசு மருத்துவமனையில் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 5,035 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 28 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நோய்த்தொற்று பரவாமல் இருக்க மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே