அண்ணா அறிவாலய அரங்கை கொரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் – மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்ட்டாக மாற்றிகொள்ளலாம் என விருப்பத்தை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரயில் பெட்டிகளும் தற்போது கொரோனா வார்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கும்; அது சார்ந்த அரசின் மற்ற அறப் பணிகளுக்கும்; வாழ்ந்த காலத்தில் மக்கள் நலம் காக்க வாழ்ந்த கலைஞர் பெயரால் அமைந்த அரங்கத்தை அரசு பயன்படுத்த உள்ளார்ந்த விருப்பத்தை தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே