பிறந்த உடன் குழந்தைகளானாலும், விலங்குகளானாலும் அவை செய்யும் சேட்டைகள் மற்றும் அவற்றின் ஒவ்வொரு அசைவும் ரசிக்கும் வண்ணம் தான் இருக்கும்.
அந்த வகையில், பிறந்து 20 நிமிடங்களே ஆன குட்டி யானை ஒன்று தன் முதல் அடியை எடுத்து வைப்பதை இந்திய வனத்துறை அதிகாரியான சுல்தான் நந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த குட்டி யானை தாய் யானையுடன் நடை பழகுவது, நடனம் ஆடுவது உள்ளதாக இவர் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும், இந்த வீடியோவை பதிவிட்டதற்கு வனத்துறை அதிகாரிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.