கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், மூன்றாம் கட்ட தளர்வாக உடற்பயிற்சி கூடங்கள், யோகா கூடங்கள் போன்ற இடங்களை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பின்பு திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் உடற்பயிற்சி கூடங்களை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
- கட்டுப்பாட்டு பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி இல்லை.
- உடற்பயிற்சி கூடத்தின் நுழைவுவாயிலில் சானிடைசர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- முக கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- உடற்பயிற்சி கூடத்திற்கு வருபவர்கள் குறைந்த பட்சம் ஆறு அடி தூரத்தை கடைபிடிக்கவேண்டும்.
- சோப்புடன் கை கழுவவும், கை சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்தவும் வேண்டும்.
- சுவாச ஆசாரங்களைப் பின்பற்றவும், துப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
- மேலும், ஆரோக்யா சேது செயலியை பயன்படுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.