குடிபோதையில் ஸ்ரீதேவியின் ஹோட்டல் அறைக்குள் நுழைய முயன்ற பிரபல நடிகர்.

தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டின் பெண் சூப்பர் ஸ்டார் ஆனவர் ஸ்ரீதேவி. யார் வாரிசும் இல்லாமல், காட்ஃபாதர் துணை இல்லாமல் பாலிவுட்டில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார் அவர். ஸ்ரீதேவி, ஜிதேந்திரா நடிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளியான ஹிம்மத்வாலா படம் சூப்பர் ஹிட்டானது.
அந்த படத்தில் நடித்தபோது நடந்த சம்பவம் ஒன்று குறித்து தற்போது பேசப்படுகிறது. ஸ்ரீதேவிக்கு சாதாரண மக்கள் மட்டும் அல்ல நடிகர்களும் கூட ரசிகர்களாக இருந்தனர். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர் ஆவார்.

ஹிம்மத்வாலா படப்பிடிப்பு நடந்த ஊரில் தான் சஞ்சய் தத் பட ஷூட்டிங்கும் நடந்தது. ஸ்ரீதேவி பிரபல ஹோட்டலில் தங்கியிருந்தது சஞ்சய் தத்திற்கு தெரிய வந்தது. அதுவரை ஸ்ரீதேவியை நேரில் பார்த்திராத சஞ்சய் தத்திற்கு அவரை பார்க்கும் ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து சஞ்சய் தத் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரின் அறைக் கதவை தட்டினார். அந்த நேரத்தில் சஞ்சய் தத் குடிபோதையில் இருந்தார். ஸ்ரீதேவி கதவை திறந்ததும் உள்ளே செல்ல முயன்றிருக்கிறார் சஞ்சய் தத். அவர் குடிபோதையில் இருப்பதை பார்த்து பயந்த ஸ்ரீதேவி வேகமாக கதவை சாத்திவிட்டாராம்.

குடிபோதையில் நான் ஸ்ரீதேவியிடம் எப்படி நடந்து கொண்டேன் என்பது எனக்கு நினைவில்லை என்று சஞ்சய் தத் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சஞ்சய் தத்தை அதுவும் முதல் முறையாக பார்த்தபோது அவர் குடிபோதையில் இருந்ததால் ஸ்ரீதேவி அவருடன் சேர்ந்து நடிக்க பயப்பட்டிருக்கிறார்.
அந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி சஞ்சய் தத்துடன் சேர்ந்து கும்ரா படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

கடந்த 2018ம் ஆண்டு துபாயில் தன் நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி ஹோட்டல் அறையில் இருந்த குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். ஸ்ரீதேவி இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் உடை மாற்றும் அறையில் இன்னும் அவர் வாசனை வருவதாக மகள் ஜான்வி கபூர் அண்மையில் தெரிவித்தார்.

ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். அவர் நடித்த முதல் படமான தடக்கின் ஷூட்டிங் துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி அதன் ரிலீஸை பார்க்க உயிரோடு இல்லை. ஸ்ரீதேவி இறந்தபோது ஜான்வி தடக் பட செட்டில் தான் இருந்தார்.

அம்மாவின் செல்லப் பிள்ளையான ஜான்வி தொடர்ந்து ஸ்ரீதேவியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஜான்வி வீட்டில் முடங்கியுள்ளார். அம்மா இல்லாததால் அப்பா போனி கபூர், தங்கை குஷி ஆகியோரை கவனித்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி.
இந்த லாக்டவுனில் வாழ்க்கை பற்றி நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக ஜான்வி தெரிவித்துள்ளார். ஜான்வியை அடுத்து தங்கை குஷியும் நடிகையாகப் போகிறார். குஷி நடிப்பு குறித்து அமெரிக்காவில் படித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த பிறகு குஷி நாடு திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே