வாங்க ஒன்னா ஜெயிக்கலாம்.. மீரா மிதுன் அரசியலில் சேர போகிறாரா?

நடிகை மீரா மிதுன் உதயநிதி ஸ்டாலின் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘நாம் ஒன்றாக புது சகாப்தத்தை படிக்கலாம்’ என கூறி உள்ளார்.
பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சையான பதிவுகளை போட்டு வருகிறார்.

தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டக்கள் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த மீரா மிதுன் அதற்குப் பிறகு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கும் அவர் செய்த விஷயங்கள் சர்ச்சையில் சிக்கியதால் அதற்கு பிறகு அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளை அவர் வெளியிட்டு வருகிறார். அவற்றில் பல பதிவுகள் சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா வை தாக்கி மீரா மிதுன் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மீர மிதுன். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது..

“நாம் ஒன்றாக ஒரு புது சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி ஸ்டாலின், நாம் ஒன்றாக ஜெயிப்போம்” என குறிப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களையும் டேக் செய்துள்ளார். இதனால் மீரா மிதுன் அரசியலில் இணைய போகிறாரோ என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு மீரா மிதுன் த்ரிஷா பற்றி பதிவிட்டு இருந்தது தொடர்பாக நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர். த்ரிஷா தன்னை காபி அடித்து தன்னை போலவே தோற்றத்தில் இருக்க முயற்சிப்பதாக மீரா மிதுன் குற்றம் சாட்டி இருந்தார்.

“த்ரிஷா இது தான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கப் போகிறது. அடுத்த முறை நீங்கள் உங்களுடைய புகைப்படத்தை போட்டோஷாப் செய்து என்னை போலவே இருப்பதற்காக முடி உள்ளிட்டவற்றை மார்பிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என நினைக்கிறேன். வளருங்கள். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள்” என மீரா கூறி இருந்தார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், த்ரிஷாவுடன் உங்களை எப்படி ஒப்பிட முடியும் என கலாய்த்தனர்.

மேலும் கடந்த மாதம் மீரா மிதுன் தனக்கு திருமணம் என ட்விட்டரில் பதிவுகள் அதிகம் போட்டு வந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் தற்போது வரை அவர் யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார், எப்போது திருமணம் என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிடாமலேயே இருக்கிறார்.

அதனை தொடர்ந்து மீரா மிதுன் ரஜினி, விஜய் உள்ளிட்ட பலரை தாக்கி பேசும் வகையில் சில ட்விட்களை சில தினங்களுக்கு முன்பு போட்டு இருந்தார் மீரா மிதுன்.

“தமிழகம் என்னை ஒதுக்கி வைத்துவிட்டது. அதற்கு நன்றி. அதனால் தான் நான் தற்போது சூப்பர் மாடலாக இருக்கிறேன். கோலிவுட் எனக்கு எதிராக இருப்பதால் நான் பாலிவுட், ஹாலிவுட்டில் பணியாற்றுகிறேன். ஆனால் தமிழகம் ஏன் இன்னும் என்னை டார்கெட் செய்கிறது என்பது தான் எனக்கு புரியவில்லை. என்னை விமர்சிப்பது தான் அவர்களின் ஒரே வேலையா?
தமிழ்நாடு தமிழர்களுக்கு, இந்துகளுக்கானது. ஆனால் மலையாளிகளும், கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தி ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள். மதுரையை எரித்த கண்ணகி போன்று எனக்கு கோபம் அதிகரித்தால் நானும் அதையே தான் தமிழகத்திற்கு செய்வேன்” என அவர் கூறி இருந்தார்.
இதற்கும் வழக்கம் போல நெட்டிசனால் அவரை ட்ரோல் தான் செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே