இன்று முதல் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள் புதிய எபிசோட்களுடன் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளன.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சின்னத்திரைப் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர்கள் இன்று முதல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளன.
மெகா தொடர்கள் இன்று முதல் (ஜூலை 27) மீண்டும் ஒளிபரப்பாகும் என சன் டிவி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சன் டிவியில் – மகராசி, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, ரோஜா, கல்யாண வீடு, நாயகி, கண்மணி போன்ற தொடர்கள் மீண்டும் புதிய எபிசோட்களுடன் ஒளிபரப்பாகவுள்ளன.
விஜய் டிவியில் ஆயுத எழுத்து, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா, செந்தூரப் பூவே, தேன்மொழி பி.ஏ. போன்ற தொடர்களும் ஜீ5 தமிழில் செம்பருத்தி, சத்யா, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, நீதானே எந்தன் பொன் வசந்தம் போன்ற தொடர்களும் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளன.