கனடாவில் மர்மநபர்களால் தாக்கப்பட்ட தமிழக மாணவி!

கனடாவில் மர்மநபரால் தாக்கப்பட்ட தமிழக மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

குன்னூரைச் சேர்ந்த ராச்சல் ஆல்பெர்ட் என்பவர் டொராண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

கடந்த புதன்கிழமை இரவு பல்கலைக் கழகம் அருகே நடந்து சென்ற ராச்சலை வழிமறித்த மர்மநபர் கத்தியால் குத்தியதில் மாணவி படுகாயமடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ராச்சலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிக்கு உதவுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராச்சலின் உறவினர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்குமாறும், தேவையான உதவிகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே