ஈரான் தீவில் உணவின்றி சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்

ஈரானில் கொரானா வைரஸ் பாதிப்பால் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் தங்களை உடனடியாக மீட்கும்படி வாட்ஸ் அப் மூலம் இரண்டாவது காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஈரானில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் ஈரானில் தற்போது கொரானா வைரஸ் பாதிப்பு தலைவிரித்தாடுகிறது.

இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் தமிழக மீனவர்கள் தற்போது துறைமுகத்தில் உள்ளனர்.

ஏற்கனவே தங்களை மீட்கும்படி முதல் காணொளி மூலம் வேண்டுகோள் விடுத்த அவர்கள், தற்போது வாட்ஸ் அப் மூலம் 2வது காணொளியை வெளியிட்டுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே