முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, உள்ளிட்ட அறுபடை வீடுகளிலும் மற்றுமுள்ள முருகன் கோவில்களிலும் கடந்த 15ஆம் தேதி கந்த சஷ்டிவிழா தொடங்கியது.

தினமும் சிறப்பு பூஜைகள், அலங்கார அபிஷேங்கள், எழுந்தருளல் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் பங்கேற்பின்றி கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

விழா நிகழ்ச்சிகள் யூடியூப் இணையத்திலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே