சாத்தான்குளம் கொலை வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை – மகன் லாக்கப் மரண வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

தந்தை – மகன் கொலை வழக்கில் கைதாகி உள்ள துணை ஆய்வாளர் ரகு கணேஷ் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே