சுஜித் இழப்பு நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு – மு.க.ஸ்டாலின்

இனி ஒரு உயிர் பலி ஆகி விடக் கூடாது அது தான் நாம் சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஸ்டாலின் நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தர சோகத்தை கொடுத்து போய் விட்டார் என கூறியுள்ளார்.

சுர்ஜித்தின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என பதிவிட்டுள்ள ஸ்டாலின், சுர்ஜித்தின் இழப்பு தனிப்பட்ட குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல; நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு; சுர்ஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான் என தெரிவித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது இனி ஒரு உயிர் பலியாகி விடக் கூடாது; அது தான் நாம் சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே