சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் மீது மாணவர்கள் புகார்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் மதிப்பெண் குறைக்கப்படும் என மிரட்டுவதாக, சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தாண்டு விடுமுறை முடிவடைந்து மீண்டும் திரும்பிய, சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோரின் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என துறைத்தலைவர்கள் மிரட்டுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் மிரட்டலுக்கு அஞ்சி, சில மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே