பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்..!!

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று சரிவுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.99 புள்ளிகள் உயர்ந்து 51,403.07 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.46 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39.75 புள்ளிகள் உயர்ந்து 15,149.05 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.42 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் வெறும் ஆறு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வு பெற்றுள்ளன.

அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ் 1.74 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 0.64 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 0.31 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே