விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்திருப்பது கண்டனத்திற்குரியது – ஸ்டாலின் ட்வீட்..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் 44-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் டெல்லி விஜியன் பவனில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையின் போது, வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று தோமர் திட்டவட்டமாக தெரிவித்தார். விவசாயிகளோ வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.

இதனால், 2 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோல் மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு இன்று நிராகரிகரித்திருப்பது கவலைக்குரியது; அதேசமயம் மிகுந்த கண்டனத்திற்குரியது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்பதை தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே