தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

கமிஷன் ஆட்சி நடத்தும் அதிமுக அரசுக்கு நல்லாட்சி விருது வழங்கியவர்களை உதைக்க வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது அவர் மணமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், மக்கள் விரோத சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்படுவதாக சாடினார்.

பாஜகவை ஆதரித்த கட்சிகள் கூட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை என்று தெரிவித்தார். 

தற்போதைய ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருக்கிறது என குறிப்பிட்ட ஸ்டாலின், இந்த அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே