கருணாநிதியின் உருவ படத்திற்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி பிறந்த நாளையொட்டி இன்று நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி , இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சேகர் பாபு எம்.எல்.ஏ., மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர், கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க தொண்டர்களான அசோக் குமார், மகாலட்சுமி ஆகியோரின் திருமணத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார்.

பின்னர் 97 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் அவர் வழங்கினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே