5 புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமனம்…!

சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட கண்காணிப்பாளர் என்ற காவல்துறை எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,

  • சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுனா சிங் தென்காசிக்கும்,
  • மதுரை பட்டாலியன் கமாண்டண்ட் ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சிக்கும்,
  • காஞ்சிபுரம் எஸ்.பி கண்ணன் செங்கல்பட்டுக்கும்,
  • திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன் ராணி பேட்டை மாவட்டத்துக்கும் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே