தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

வரும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வரும் 20-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரம்-நெல்லை இடையே 21 மற்றும் 23ம் தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் நாகர்கோவில்-தாம்பரம் இடையே அக்டோபர் 29 மற்றும் 30-ஆம் தேதிகளிலும், தாம்பரம்-திருச்சி இடையே வரும் 30ம் தேதியும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

வாராந்திர சிறப்பு ரயில்களாக விழுப்புரம்-செகந்திராபாத் இடையே நவம்பர் ஆறாம் தேதி மற்றும் டிசம்பர் 25ஆம் தேதியும், மறு மார்க்கமாக செகந்திராபாத்-விழுப்புரம் இடையே நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 27ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே