அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறமுடியாது..! – ட்ரம்ப் அதிரடி

கொரோனா தாக்கம் காரணமாக அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக தடுக்க கையெழுத்திட உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அமெரிக்கா மற்ற நாடுகளை விட கோரமான பாதிப்புகளை சந்தித்துள்ளது.

7.92 லட்சம் பேர் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பற்றி உரிய எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று உலக சுகாதார இயக்குநர் உடன் மோதல், ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக நியூயார்க் மாகாண ஆளுநருடன் வார்த்தை யுத்தம் ஆகியவற்றை நடத்திவரும் அதிபர் டிரம்ப், கொரோனா பரவலுக்கு சீனாவை முதன்மை காரணமாக கூறியுள்ளார்.

மேலும், மற்ற உலக நாடுகளை விட அமெரிக்காவில் அதிகம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்தார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதலில் இருந்து அமெரிக்க குடிமக்களின் பணிகளை காக்க வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு எவ்வளவு காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே