“ரிஷப் பன்டை அவர் போக்கில் விடுங்கள். நிச்சயம் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடுவார்” -ரோகித்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நட்சத்திர வீரராக உருவாகியுள்ளார் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பர்ஸ்ட் கிளாசாக விளையாடி அசத்தியிருந்தார். இந்நிலையில், ரிஷப் பன்டை அவர் போக்கில் விடுங்கள். நிச்சயம் மேட்ச் வின்னிங் இன்னினக்ஸ்களை தொடர்ந்து ஆடுவார் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா. 

“ரிஷப் பன்ட் அபாரமாக விளையாடி வருகிறார். அவரை அவர் போக்கில் விட்டு விட வேண்டும். நிச்சயம் நல்ல மேட்ச் வின்னராக அவர் ஜொலிப்பார். அதைவிடுத்து அவர் மீது தேவையில்லாத பிரஷரை போடுவது தவறு. இந்த விளையாட்டை அவர் ஜாலியாக அனுபவித்து விளையாட நாம் அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அதை தான் அணி நிர்வாகம் செய்து வருகிறது. ஒவ்வொரு தொடராக அவர் பல பாடங்களை கற்று கைதேர்ந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வருகிறார்” என ரோகித் ஷர்மா, ரிஷப் பன்ட் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வானவேடிக்கை காட்டும் கிரிக்கெட் வீரர் பன்ட். டி20 என்றால் சொல்லவா வேண்டும். பன்ட் ஆட்டத்தில் அதிரடிக்கும், சர்வெடிக்கும் பஞ்சமே இருக்காது என பன்ச் பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே