டில்லியில் இருந்து டேராடூன் சென்ற பயணிகள் ரயில் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

டில்லியில் இருந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூன் சென்ற சதாப்தி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.

கன்ஸ்ரோ என்ற இடமருகே வந்தபோது, சி4 பெட்டியில் மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைவாக செயல்பட்டு, அந்த பெட்டியில் இருந்த 35 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

யாருக்கும் காயம் ஏதும் இல்லை.

மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், ரயில் டேராடூன் கிளம்பி சென்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே