மருத்துவக் கலந்தாய்வின்போது, மகளுககு போலி நீட் தேர்வு சான்றிதழை வழங்கிய வழக்கில், பல் மருத்துவர் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பல் மருத்துவர் மற்றும் அவரது மகள் தீக்சா மீது, 6 பிரிவுகளின் கீழ், சென்னை பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, இருவரும் தலைமறைவாகினர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த பல் மருத்துவர் பாலச்சந்திரனை, கைது செய்த சென்னை பெரியமேடு தனிப்படை போலீசார், எழும்பூரில் நீதிமன்ற நடுவர் தமிழ்ச்செல்வி முன் ஆஜர்படுத்தினர்.

பின்னர், அவர் வருகிற 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மாணவி தீக்சாவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே