49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சென்செக்ஸ் புதிய உச்சம்..!!

இந்திய பங்குசந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.

மும்பை பங்கு சந்தையில், சென்செக்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக 49 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை துவக்கி சாதனை படைத்தது.

தேசிய பங்குசந்தையில் நிப்டி 14 ஆயிரத்து 400 புள்ளிகளுடன் உயர்ந்த அளவில் வர்த்தகத்தை துவக்கியது.

முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து வர்த்தகமான நிலையில், எஃகு மற்றும் சிமென்ட் நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே