#BREAKING : 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டம்..!!

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தேர்வுகளையும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே