தில்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை செய்தியாளர்களிடம் விவரித்தார் கெஜ்ரிவால். அப்போது பேசிய கெஜ்ரிவால், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது; ஹோட்டல்கள் பார்சல்களை வழங்க மட்டுமே அனுமதிக்கப்படும். திரையரங்குகளில் 30% பேர் மட்டும்தான் அனுமதிக்கப்பட வேண்டும்.
உடற்பயிற்சி கூடங்கள், ஆடிட்டோரியங்கள் ஆகியவற்றை மூடவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருவதால் அங்கு வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.