கோவிட் – 19 வைரஸ் பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும்; அவரது உடல்நிலை மிக சிக்கலான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கிடையே, அவரது உடல்நிலை தொடர்பாக அவரது மகன் எஸ்.பி. சரண் விளக்கியுள்ளார்.
“என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி.
அவர் ஐசியூவில் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்.
அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல்களை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். மீண்டும் நன்றி” என்று எஸ்.பி. சரண் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் மீண்டு வர வேண்டும் என பல்வேறு திரை பிரபலங்களும், பாடகர்களும், கிரிக்கெட் நட்சத்திரங்களும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.