அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு உடல் நலக்குறைவு..! மருத்துவமனையில் அனுமதி..!!

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் இறந்த தகவல் அறிந்து, நேரில் நலம் விசாரிக்க தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு செவ்வாய்க்கிழமை காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

காலை 10 மணி அளவில் ‌திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி அவசர சிகிச்சை அளித்தனர்.

அமைச்சர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்ட விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம்.

இதில் நெஞ்சு வலியில் இருந்து விடுபட்ட அமைச்சர், மேல் சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே