5 ரூபாய்க்கு சேலை,1 ரூபாய்க்கு லுங்கி விற்பனை : அலைமோதிய கூட்டத்தில் சிக்கி மயங்கிய பெண் ஊழியர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 5 ரூபாய் நாணயத்துக்கு புடவையும் 1 ரூபாய் நாணயத்துக்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என அறிவித்த கடையின் முன் பெருந்திரளான மக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பிரபல துணிக்கடையில் 51வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி மூன்று தினங்களுக்கு ஐந்து ரூபாய்க்கு சேலையும் ஒரு ரூபாய்க்கு வேட்டியும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து காலையில் இருந்தே கடை வாசலில் குவிந்திருந்த பொதுமக்கள் கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழைந்தனர்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது மேலும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

இதனிடையே கூட்டத்தில் சிக்கிய கடையின் பெண் ஊழியர் ஒருவர் மயக்கம் அடைந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மயக்கமடைந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வந்தும் கூட்டம் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனம் திரும்பிச் சென்றதால் மயக்கமடைந்த பெண் ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே