JUST NOW : கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என தீர்ப்பு!

கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, அவரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ராதிகா இன்று தீர்ப்பளித்தார்.

அதில் சந்தோஷ் குமார் குற்றவாளி என்றும் தண்டனை விவரம் பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

இதனிடையே சென்னையில் இருந்து வந்த சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் சந்தோஷ் குமாருடைய விந்தணுக்கள் மட்டுமல்லாது வேறு ஒரு நபரின் விந்தணுவும் கலந்திருப்பதாக தகவல் வெளியானது.

இதனால் போலீசார் சந்தோஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே