சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பரிந்துரை..!!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ஏபி சாஹி, வரும் 31 ஆம் தேதி பணி ஓய்வு பெற இருப்பதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சஞ்ஜீப் பானர்ஜி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

ஏபி சாஹி ஓய்வு பெற்ற பின் செனைனை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி பதவியேற்பார். அதே போன்று ஒடிசா, தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், கவுகாத்தி உயர்நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே