இந்திய அணியில் இடம் பிடித்தார் சானியா மிர்சா..!!

பெடரேஷன் கோப்பை டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் சானியா மிர்சா இடம் பெற்றுள்ளார்.

கடைசியாக 2016-ம் ஆண்டு பெடரேஷன் கோப்பை தொடரில் களமிறங்கிய சானியா, 2017-ல் குழந்தை பிறந்த பிறகு டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார்.

தற்போது மீண்டும் முழு உடல்தகுதியுடன் தயாராகி உள்ள அவர் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாட உள்ளார்.

இதனிடையே பெடரேஷன் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியில் அவர் இடம் பிடித்துள்ளார்.

அவருடன் அங்கிதா ரெய்னா, டியா பாட்டியா, ருதுஜா போசலே, கர்மான் கவுர் தண்டி ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

விஷால் உப்பல் கேப்டனாகவும், அங்கிதா பாம்ப்ரி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே