ஒரே நாடு ஒரே நாள் சம்பளம்; மத்திய அரசின் அசத்தல் திட்டம்

நாடு முழுவதும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் போட வகை செய்யும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்,

  • குறிப்பிட்ட ஒருநாள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் அந்த நாளில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
  • இது தொடர்பான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளார்.
  • தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய இது வழிவகை செய்யும்.
  • அதேபோன்று அனைத்து துறைகளிலும் ஒரேமாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

தற்போது ஒருசில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு 15ஆம் தேதிக்கும் பின்னரும் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வரும் நிலையில், இந்த சட்டம் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே