#BREAKING : ஜூலை 15ஆம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து – விமான போக்குவரத்து அமைச்சகம்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 15 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதாவது, வருகிற ஜூலை 15 வரை சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும்; அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டம் உள்ளிட்ட சிறப்பு விமான சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு படிப்படியாக விமான சேவை பின்னர் அனுமதிக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே