தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர்
தற்போது இவர் 5 ஆண்டுகள் கழித்து சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஆம் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் ரோஜா அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கடத்தல் சம்பந்தப்பட்ட கதையம்சத்தை கொண்ட புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா அல்லுக்கு ஜோடியாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.