காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 தொடரில் விளையாட வில்லை.
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2020/02/Rohit-Sharma-withdraws-from-New-Zealand-series-1.jpg?resize=623%2C375&ssl=1)
அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், ஐந்தாவது டி20 போட்டியில் அவர் களமிறங்கி 60 ரன்களை குவித்தார்.
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2020/02/Rohit-Sharma-withdraws-from-New-Zealand-series2.jpg?resize=739%2C415&ssl=1)
இந்த நிலையில், காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ரோஹித் சர்மா எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.