இந்தியா – இங்கிலாந்து ‘பிங்க் பால்’ டெஸ்ட்: எப்படி இருக்கும் இரு அணிகளும்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி இன்று பிங்க் பந்தில் பகலிரவு போட்டியாக தொடங்குகிறது.

அகமதாபாத்தில் உள்ள பிரம்மாண்ட சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், இந்தியப் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவு ஆட்டமாக போட்டி தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்காக ஆடும் லெவனில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யவுள்ளதாக தெரிகிறது.

பேர்ஸ்ட்டோவ், ஸேக் கிராவ்லி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணியில் ஷாபாஷ் நதீமிற்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர் யார் என்பதை தீர்மானிக்கவுள்ள போட்டிகள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் உள்ளது. மேலும் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளும் முற்றிலும் புதிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், இரு அணிகளுக்கும் சவால்கள் நிறைந்திருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் புனரமைக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடைமுறை காரணமாக 55000 ரசிகர்கள் இப்போட்டியை காண அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் அகமதாபாதில் அணி.யின் சராசரி ஸ்கோர் 382 என வரலாறு சொல்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே