5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து..!

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறைகளின் படியே ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டிருக்கிறார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே