இறந்த உடலில் இருந்தும் வைரஸ் பரவும் அபாயம்!!

கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடலில் இருந்தும் வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் இதுபோன்று மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உள்ள உடலை கூராய்வு செய்தபோது அந்த மருத்துவருக்கும் வைரஸ் பரவியதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், உடல்களை கையாளும் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் தனி இடத்தில் அடக்கம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைத்தாலோ அல்லது உடலை எரித்தாலோ வைரஸ் பரவாது என்றும், அதனால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே