ஜனசதாப்தி ரயில், திர்பாராத விதமாக ரயில் பின்னோக்கி சென்றுள்ளது. ரயில் வேகமாக பின்னோக்கி சென்றதால், ரயிலில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.

உத்தரகாண்டில் பூரணகிரி, ஜனசதாப்தி ரயில், டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

காதிமா, தனக்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, குறுக்கே வந்த பசு மாடு ரயிலில் அடிபட்டது. ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.

பின்னர் மீண்டும் ரயிலை இயக்கிய போது, எதிர்பாராத விதமாக ரயில் பின்னோக்கி சென்றுள்ளது.

ரயில் வேகமாக பின்னோக்கி சென்றதால், ரயிலில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். ரயிலை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர், உடனடியாக கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, காதிமா அருகே ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சாலை மார்க்கமாக தனக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே